Published : 25 Jul 2024 02:42 PM
Last Updated : 25 Jul 2024 02:42 PM

சிவகாசி மாநகராட்சியில் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றும் ஊழியர்கள்

சிவகாசி: சிவகாசி மாநகராட்சியில் தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று (வியாழக்கிழமை) அலுவலர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

நகராட்சி, மாநகராட்சி ஊழியர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பணியிட மாறுதல்களுக்கு கலந்தாய்வு நடத்த வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அரசாணை 152, 10-ல் விடுபட்ட பணியிடங்களை வழங்க வேண்டும். நகராட்சி, மாநகராட்சி பணியாளர்களுக்கு கரோனா காலத்தில் பணியாற்றியதற்கான ஊக்கத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகாசி மாநகராட்சியின் அனைத்து அலுவலர்களும், பணியாளர்களும் இன்று கோரிக்கை அட்டை அணிந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x