Published : 09 Jul 2024 06:15 AM
Last Updated : 09 Jul 2024 06:15 AM

அதிமுகவை ஒருங்கிணைக்க நடவடிக்கை: தென்காசியில் 16-ம் தேதி சசிகலா சுற்றுப்பயணம்

சென்னை: அதிமுகவை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையாக வி.கே.சசிகலா வரும் 16-ம் தேதி தென்காசியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 2026-ல் ஒன்றுபட்டஅதிமுக ஆட்சிக்கு வர வேண்டும்என்று சசிகலா அண்மையில்செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும், கட்சியை ஒன்றிணைக்கவும், 2026-ல் ஆட்சிமாற்றத்தை கொண்டு வரவும்,தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தொண்டர்களை, பொது மக்களையும் சந்திக்க இருப்பதாகவும் சசிகலா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், சசிகலா தனதுசுற்றுப்பயணத்தை வரும் 16-ம்தேதி தென்காசியில் தொடங்கஇருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை தென்காசி மாவட்டபொறுப்பாளர் பூசத்துரை மேற்கொண்டு வருகிறார். காவல்துறை அனுமதி கோரியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.

இம்மாவட்டத்தில் அவர் 21-ம்தேதி வரை சட்டப்பேரவை தொகுதிவாரியாக சென்று தொண்டர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, பிற மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x