Published : 05 Jul 2024 07:07 PM
Last Updated : 05 Jul 2024 07:07 PM

இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு இரு குழந்தைகளுடன் அகதியாக வந்த தாயிடம் விசாரணை

படம்: எல்.பாலச்சந்தர்

ராமேசுவரம்: இலங்கையில் இருந்து தனுஷ்கோடிக்கு வந்த 2 குழந்தைகள் மற்றும் அவரது தாய் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை மன்னார் மாவட்டம் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த யோகவள்ளி (34), அவரது குழந்தைகள் அனுஜா (08), மிஷால் (05) ஆகிய மூவர் இலங்கையில் உள்ள தலைமன்னாரிலிருந்து பைபர் படகில் புறப்பட்டு தனுஷ்கோடி கடற்பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வந்து இறங்கி உள்ளனர். தகவலறிந்து அங்கு வந்த மெரைன் போலீஸார் தனுஷ்கோடி கடற்கரை பகுதியிலிருந்து விசாரணைக்காக மூன்று பேரையும் மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், யோகாவள்ளி விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அகதி முகாமில் பிறந்தவர் என்றும், 15 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை திரும்பியவர் அங்கே திருமணம் முடிந்து கணவரை பிரிந்து வாழ்ந்ததும் தெரிய வந்தது.

இரண்டு குழந்தைகளுடன் இலங்கையில் வாழ முடியாத சூழலில் வெம்பக்கோட்டை முகாமில் அவரது தாயாருடன் சேர்ந்து வாழ்வதற்காக மீண்டும் அவர் தமிழகம் வந்ததாகவும் தெரியவந்துள்ளது. விசாரணைக்குப் பின்னர் மூவரையும் மெரைன் போலீஸார் மண்டபத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒப்படைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x