Published : 04 Jul 2024 05:18 AM
Last Updated : 04 Jul 2024 05:18 AM

இலங்கை கடற்படையை கண்டித்து பாம்பனில் மீனவர்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம்

கோப்புப் படம்

ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை கடலுக்குச் சென்ற இருதயராஜ், ஸ்டீபன்,ஜார்ஜ் ஆகியோருக்குச் சொந்தமான 3 நாட்டுப்படகுகள், நம்புதாளை பகுதியிலிருந்து கடலுக்குச் சென்ற ஒரு நாட்டுப்படகு என மொத்தம் 4 நாட்டுப் படகுகளை கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், அவற்றில் இருந்த 25 மீனவர்களை கைது செய்தனர்.

சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப்படகு மீனவர்கள் நேற்றுமுன்தினம் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கினர்.

இந்நிலையில், நேற்று பாம்பன் மீன்பிடித் துறைமுகத்தில் 200-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் கருப்புக்கொடிகளை கட்டிய மீனவர்கள், இரண்டாம் நாளாக நேற்றும்வேலைநிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டனர். மேலும், நாளை(ஜூலை 5) பாம்பன் சாலைப் பாலம், மண்டபம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டங்கள் நடத்தப்படும் என்று மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x