Published : 04 Jul 2024 09:07 AM
Last Updated : 04 Jul 2024 09:07 AM

சென்ட்ரல் - திருத்தணி மின்சார ரயில் சேவையில் மாற்றம்

கோப்புப்படம்

சென்னை: ரயில்வே பொறியியல் பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - திருத்தணி இடையே இயக்கப்படும் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அரக்கோணம் - ரேணிகுண்டா மார்க்கத்தில் பொறியியல் பணிநடக்கவுள்ளதால் இந்த மாற்றம்செய்யப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு: சென்னை சென்ட்ரல் - திருத்தணிக்கு ஜூலை 4, 6 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், அரக்கோணம் - திருத்தணி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.

திருத்தணி - அரக்கோணத் துக்கு ஜூலை 4, 6 ஆகிய தேதிகளில் இரவு 11.10 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ரத்து செய்யப்படவுள்ளது.

இந்தத் தகவல் சென்னைரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x