Published : 25 Jun 2024 08:11 PM
Last Updated : 25 Jun 2024 08:11 PM

3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

பாலகிருஷ்ண ரெட்டி | கோப்புப்படம்

சென்னை: பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக, முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மொத்தம் 108 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேரை குற்றவாளிகள் என அறிவித்து சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த வழக்கில் அமைச்சராக பதவி வகித்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு ஜன.7 அன்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் காரணமாக பாலகிருஷ்ண ரெட்டி தனது அமைச்சர் பதவியை இழந்தார்.

சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து பாலகிருஷ்ண ரெட்டி உள்பட 16 பேர் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x