Published : 25 Jun 2024 06:19 AM
Last Updated : 25 Jun 2024 06:19 AM

கீழடி 10-ம் கட்ட அகழாய்வில் பல வண்ண கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் பல வண்ணங்களில் கண்டெடுக்கப்பட்ட கண்ணாடி மணிகள்.

திருப்புவனம்: கீழடியில் பல வண்ணங்களில் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற அகழாய்வுகள் மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரீகம் இருந்துள்ளது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே 9 கட்ட அகழாய்வு பணிகள் மூலம் பல ஆயிரம் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்நிலையில், 10-ம் கட்ட அகழாய்வு பணியை ஜூன் 18-ம் தேதி கீழடி, கொந்தகை ஆகிய 2 இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடியே காணொலி மூலம் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கீழடியில் 2 குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக சில அடி ஆழத்திலேயே பல வண்ணங்களில் கண்ணாடி மணிகள் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 27 மணிகள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். விரைவில் கொந்தகையில் அகழாய்வுப் பணி தொடங்கப்பட உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x