Last Updated : 23 Jun, 2024 07:19 PM

 

Published : 23 Jun 2024 07:19 PM
Last Updated : 23 Jun 2024 07:19 PM

கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த உ.பி. மாநில இளைஞர் உடல் கள்ளக்குறிச்சியில் அடக்கம்

மாதிரிப் படம்

கள்ளக்குறிச்சி: கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்த உ.பி.மாநிலத்தைச் சேர்ந்த பிஜேந்தர் உடல் இன்று (ஞாயிற்றுகிழமை) அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, கள்ளக்குறிச்சியிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியவர்களில் இன்று (ஞாயிற்றுகிழமை) மாலை வரை 57 பேர் உயிரிழந்தனர். இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பிஜேந்தர் என்பவரும் அடக்கம். அவரது உறவினர்கள் யார் என்பது அடையாளம் தெரியாத நிலையில், போலீஸார் துணையோடு, அவரது உறவினர்கள் அறியப்பட்டு, அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நேற்று கள்ளக்குறிச்சி வந்த அவரது உறவினர்களிடம், பிஜேந்திரன் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உடலைப் பெற்றுக்கொண்ட அவர்கள், அவரத உடலை கள்ளக்குறிச்சியிலேயே அடக்கம் செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அரசு அறிவித்த நிவாரணத் தொகைக் குறித்து அவரது உறவினர்கள் கேட்டபோது, உத்தரப்பிரதேசத்தில், அவர்கள் வசிப்பிட மாவட்ட ஆட்சியரிடமிருந்து உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தவுடன், அரசு அறிவித்த ரூ.10 லட்சத்துக்கான நிவாரணத் தொகை வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் சொந்த ஊர் திரும்பிச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x