Published : 19 Jun 2024 07:05 AM
Last Updated : 19 Jun 2024 07:05 AM

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது: எல்.முருகன் கருத்து

சென்னை: தமிழகத்தில் பாஜகவுக்கு இடமில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை, விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களிடம் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக எந்தஅளவு வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதை மக்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது. தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தங்களுடைய குடும்பத்தை தவிர வேறுயாரும் வயநாட்டில் களம் காணக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.வந்தே பாரத் ரயிலையும் ரயில்வே துறைதான் இயக்குகிறது. ரயில் விபத்துகள் தவிர்க்கமுடியாத ஒன்று. ரயில்வேஅமைச்சர் மேற்கு வங்கத்துக்கு சென்று உதவிகளை செய்து வருகிறார் என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x