Last Updated : 15 Jun, 2024 12:50 PM

4  

Published : 15 Jun 2024 12:50 PM
Last Updated : 15 Jun 2024 12:50 PM

சென்னை வரும் பிரதமர் மோடி என்னென்ன திட்டங்களை தொடங்கி வைக்கிறார்? - ரயில்வே அதிகாரிகள் தகவல்

பிரதமர் மோடி

சென்னை: பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, 20-ம் தேதி சென்னைக்கு வரவுள்ள நிலையில், அவர் என்னென்ன ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார்? என்பது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

நாட்டின் பிரதமராக 3-வது முறையாக மோடி பொறுப்பேற்ற பிறகு, சென்னைக்கு முதல்முறையாக வரவுள்ளார் மோடி. இந்தப் பயணத்தின் போது சென்னையில் வந்தே பாரத் ரயில் சேவை உள்பட பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: “பிரதமர் மோடி 20-ம் தேதி சென்னைக்கு வருகிறார். அப்போது அவர் பல்வேறு ரயில்வே திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் விழாவுக்கான ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இங்கு சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, பேசின்பாலம் யார்டில் வந்தே பாரத் பராமரிப்பு பணிமனை அமைக்க அடிக்கல் நாட்டுகிறார்.

ஆரல்வாய்மொழி - நாகர்கோவில் மற்றும் மேலப்பாளையம் - திருநெல்வேலி இடையே நிறைவடைந்த இரட்டை ரயில்பாதை திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இதுதவிர, நாகர்கோவில் டவுன் - நாகர்கோவில் சந்திப்பு- கன்னியாகுமரி இடையே முடிக்கப்பட்ட இரட்டை ரயில்பாதை திட்டத்தையும் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவற்றை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து, மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி காணொலி காட்சிவாயிலாக தொடங்கிவைக்கிறார்.

இதுபோல, மாநிலத்தில் பல்வேறு திட்டங்களை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார். தற்போதைய அட்டவணைப்படி இந்த திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் விரைவில் செய்யப்பட உள்ளன.சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டாலும், இந்த ரயிலின் வழக்கமான சேவை சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையே இயக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x