Published : 26 Aug 2014 12:00 AM
Last Updated : 26 Aug 2014 12:00 AM

குரூப்-2 தேர்வுக்கு 5, 6-வது கட்ட கலந்தாய்வு

அரசு சார்நிலைப் பணிகளில் நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகளில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 30.7.2011 அன்று எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதுவரை, 4 கட்டங்களாக கலந்தாய்வு நடத்தப்பட்டு, காலியிடங்கள் நிரப்பப்பட்டன.

நேர்காணல் உள்ள பணிகளுக்கான 5-வது கட்ட கலந்தாய்வும், நேர்காணல் அல்லாத பணிகளுக்கான 6-வது கட்ட கலந்தாய்வும் செப்டம்பர் 1, 2-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள தகுதியுடைய நபர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் கலந்தாய்வுக்கு வராத விண்ணப்பதாரர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x