Last Updated : 04 Jun, 2024 10:52 AM

 

Published : 04 Jun 2024 10:52 AM
Last Updated : 04 Jun 2024 10:52 AM

தென் சென்னையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை

தமிழச்சி தங்கபாண்டியன் | கோப்புப்படம்

சென்னை: தென் சென்னை தொகுதியில் முதல் சுற்று முடிவில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் முன்னிலை பெற்றுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன், அதிமுக சார்பில் ஜெயவர்தன், நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ்செல்வி போட்டியிட்டு உள்ளனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்குக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்கி வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றது.

தென் சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் முதல் சுற்று முடிவில் தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 27,258 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 14, 745 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 9,176 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 3,951 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x