Published : 31 May 2024 06:09 AM
Last Updated : 31 May 2024 06:09 AM

சென்னை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், செங்கல்பட்டு பணிமனையில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், மே 31 (இன்று) மற்றும் ஜூன் 4 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு காலை9.30, 10.56, 11.40, 12.40 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள், சிங்கபெருமாள்கோவில் வரை மட்டுமே செல்லும். அதேபோல, செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு முற்பகல் 11.30, மதியம் 1.00, 1.45, பிற்பகல் 3.05 ஆகிய நேரங்களில் புறப்பட வேண்டிய மின்சார ரயில்கள், சிங்கபெருமாள்கோவிலில் இருந்து புறப்படும்.

சிங்கபெருமாள்கோவில் - செங்கல்பட்டு இடையே இந்தரயில்கள் பகுதி ரத்து செய்யப்படுகின்றன என்று சென்னைரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x