Published : 30 May 2024 06:25 AM
Last Updated : 30 May 2024 06:25 AM

இஸ்ரேலை கண்டித்து ஜூன் 2-ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி முதல் சின்னஞ்சிறு பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் ராணுவம் இனப் படுகொலை அட்டூழியத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இதுவரை 36 ஆயிரம் பேருக்கு மேல் இஸ்ரேலின் தாக்குதலால் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த 26-ம் தேதியன்று எல்லை நகரமான ரஃபாவில் அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் அரசைக் கண்டித்தும் போர் நிறுத்தம் செய்யக் கோரியும் ஜூன்2-ம்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் தழுவிய அளவில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x