Published : 21 May 2024 04:10 AM
Last Updated : 21 May 2024 04:10 AM

தமிழ்நாடு டிஜிட்டல் உச்சி மாநாடு: சென்னையில் மே 25, 26 தேதிகளில் நடைபெறுகிறது

சென்னை: தமிழ்நாடு டிஜிட்டல் உச்சி மாநாடு-2024, இம்மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட் டுக்கு முன்னணி டிஜிட்டல் மார்க் கெட்டிங் அகாடமியான சோஷியல் ஈகிள் ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து சோஷியல் ஈகிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் விஷ்ணு ஹரி கூறுகையில், “மாறி வரும் டிஜிட்டல் சந்தை மற்றும் தொழில் துறை குறித்து ஏராளமான கருத்துகளை அந்த துறையைச் சேர்ந்த நிபுணர்கள் பரிமாறிக்கொள்ள உள்ளனர். பிரகாசமான சிந்தனைகளையும், தலைவர்களையும் ஒரே குடை யின் கீழ் கொண்டு வரும் வாய்ப்பை இந்த மாநாடு வழங் கும். சாதனைகளை கொண் டாடுவதற்கும், மதிப்புமிக்க தொடர்புகளை உருவாக்கிக் கொள்வதற்கும் இந்த உச்சி மாநாடு ஒரு பாலமாக அமையும். டிஜிட்டல் ஆளுமைகளுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட உள்ளன’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x