அமைச்சர்கள், ஓபிஎஸ்-க்கு எதிரான மறு ஆய்வு வழக்கு: அடுத்த மாதம் தள்ளிவைப்பு

அமைச்சர்கள், ஓபிஎஸ்-க்கு எதிரான மறு ஆய்வு வழக்கு: அடுத்த மாதம் தள்ளிவைப்பு
Updated on
1 min read

சென்னை: அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஆகியோருக்கு எதிரான மறு ஆய்வு வழக்குகளின் விசாரணை ஜூன் மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை விடுவித்து கீழமை நீதிமன்றங்கள் பிறப்பித்த தீர்ப்புகளை மறு ஆய்வு செய்யும் விதமாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறார்.

இந்த வழக்குகளில் ஏற்கெனவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வாதங்கள் முடிந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையின் வாதத்துக்காக விசாரணை தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், விசாரணையை ஜூன் மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in