Published : 30 Mar 2024 07:25 AM
Last Updated : 30 Mar 2024 07:25 AM

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட 5 கிலோ 300 கிராம் தங்க நகைகளை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயினியிடம் ஒப்படைத்த தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள்.

விருதுநகர்: விருதுநகரில் உரிய ஆவணங்கள் இன்றி ஜீப்பில் கொண்டு செல்லப்பட்ட 5.3 கிலோ தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி சோதனைச் சாவடியில் தேர்தல் பறக்கும்படை அலுவலர் இந்துமதி தலைமையிலான அதிகாரிகள் நேற்று பிற்பகல் வாகன சோதனை நடத்தினர். அப்போது, மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு் புறப்பட்டதனியார் கூரியர் நிறுவனத்தின் ஜீப்பை நிறுத்தி சோதனையிட்டனர். உரிய ஆவணங்கள் இன்றி கன்னியாகுமரியில் உள்ள பல்வேறு நகைக் கடைகளுக்கு 5.3 கிலோ தங்க நகைகள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் நாகராஜ், டெலிவரி உதவியாளர் நரேஷ் பாலாஜி ஆகியோர் நகைகளை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து 5.3 கிலோதங்க நகைகளை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து, விருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கார்த்திகேயினியிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவை மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x