Published : 25 Aug 2014 10:23 AM
Last Updated : 25 Aug 2014 10:23 AM
ரயில் நிலையத்தில் காத்திருந்த பெண் மீது மிளகாய்ப் பொடி தூவி 5 சவரன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அரக்கோணம் அடுத்த புளியமங்கலத்தைச் சேர்ந்தவர் செல்வராணி. இவர் ஐ.சி.எப் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு செல்ல புளிய மங்கலம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத 2 பேர், அவரிடம் முகவரி விசாரிப்பது போல் வந்தனர். அருகில் வந்த அவர்களில் ஒருவர், செல்வராணி யின் முகத்தில் மிளகாய்ப் பொடியை தூவினார். இதனால் செல்வராணி அதிர்ச்சி அடைந் தார். இதை பயன்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் மின்னல்வேகத்தில் பறித்துக் கொண்டு தப்பி ஓடினர். அதிர்ச்சி யில் செல்வராணி கூச்சலிட்டதும், வெகு தொலைவில் இருந்தவர்கள் ஓடிவந்து விசாரித்தனர். அதற்குள் மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து செல்வராணி அளித்த புகாரின்பேரில் அரக் கோணம் ரயில்வே போலீஸார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர். ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 19-ம் தேதி அரக் கோணம் மின்சார ரயிலில் 2 பெண்கள் மீது தாக்குதல் நடத்தி, நகையை பறித்துச்சென்ற நபரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்நிலையில் மீண்டும் ரயில் பயணியிடம் கொள்ளை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT