Published : 13 Mar 2024 05:15 AM
Last Updated : 13 Mar 2024 05:15 AM

தமிழக அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

கோப்புப்படம்

சென்னை: அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல், மத்திய அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் போதெல்லாம் உடனுக்குடன் தமிழக அரசும் அதை பின்பற்றி அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். அந்த வகையில், மத்திய அரசு பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி 1 முதல், 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநில அரசு பணியாளர்களுக்கும் 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி 50 சதவீதமாக கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் பயன்பெறுவார்கள். இதனால், ஆண்டுக்கு ரூ.2,587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர் நலன் கருதி, இதற்கான கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x