Last Updated : 07 Mar, 2024 05:06 PM

 

Published : 07 Mar 2024 05:06 PM
Last Updated : 07 Mar 2024 05:06 PM

கோடை வெயில் - போக்குவரத்து போலீஸாருக்கு நீர், மோர் வழங்கிய மதுரை காவல் ஆணையர்

படம்: எஸ். கிருஷ்ணமூர்த்தி

மதுரை: கோடை வெயில் தொடங்கியதால் மதுரையில் போக்குவரத்து போலீஸாருக்கு நீர், மோர் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையர் ஜே.லோகநாதன் இன்று தொடங்கி வைத்தார்.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தில் இருந்தும், வெப்பத்தில் இருந்தும் தணிக்கும் வகையில் மதுரை மாநகர போக்குவரத்து காவலர்களுக்கு நீர், மோர் போன்ற குளிர் பானம் வழங்குவது வழக்கம். இதன்படி, இவ்வாண்டுக்கான கோடை வெயில் தொடங்கிய நிலையில், மதுரை மாநகர போக்குவரத்து காவலர்களின் உடல்நலன் கருதி நீர், மோர் வழங்கும் நிகழ்ச்சி தொடக்க விழா கோரிப்பாளையத்தில் இன்று நடந்தது. காவல் ஆணையர் ஜே.லோகநாதன் போக்குவரத்து காவல்துறையினருக்கு நீர், மோரை கொடுத்து தொடங்கி வைத்தார்.

இதன்படி, தினமும் முற்பகல் 11 மணி மற்றும் பிற்பகல் 3 மணிக்கு அந்தந்த பகுதியில் பணியில் இருக்கும் போக்குவரத்து அதிகாரிகள், காவலர்களுக்கு நீர், மோர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2 மாதத்திற்கு மேலாக இத்திட்டம் பின்பற்றப்படும் என, காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார், உதவி ஆணையர் செல்வின், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சோபனா உள்ளிட்ட ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x