Published : 02 Mar 2024 05:26 AM
Last Updated : 02 Mar 2024 05:26 AM

பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடக்கம் | மொழிப்பாட தேர்வு எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

பிளஸ் - 2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது முன்னதாக மாணவிகளுக்கு அமைதியாக பதட்டம் இன்றி தேர்வு எழுத பிராணயாமா பயிற்சி. அளிக்கப்பட்டது. இடம் அசோக் நகர் மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி - படம்: ம.பிரபு

சென்னை: பிளஸ் 2 வகுப்புக்கான மொழிப் பாடத்தேர்வு எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரி வித்தனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு நேற்று தொடங் கியது. முதல் நாளில் தமிழ் உட்பட மொழிப்பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன.

இந்தத் தேர்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,302 மையங்களில் 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். சென்னையில் மட்டும் 42 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.மாணவர்கள் தீவிர பரிசோதனைக் குப் பின்னரே மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

பொதுத்தேர்வுக்கான ஏற்பாடுகள் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், சென்னை திருவல்லிகேணியில் உள்ள பள்ளியில் நேரில் ஆய்வுசெய்தார். அதன்பின் மாணவர் களிடம் நன்றாகத் தேர்வு எழுதுங்கள் என்று அறிவுரை வழங்கினார்.

இதற்கிடையே, தமிழ் பாடத் தேர்வு வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். சராசரி மாணவர்கள்கூட நல்ல மதிப்பெண் பெற முடியும் என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆங்கிலப் பாடத்தேர்வு 5-ம் தேதி நடைபெற உள்ளது. பொதுத்தேர்வு மார்ச் 22-ம் தேதியுடன் முடிக்கப்பட்டு, தேர்வு முடிவுகள் மே 5-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

13,407 மாணவர்கள் ‘ஆப்சென்ட்’: மொழிப்பாடத் தேர்வில் பள்ளிமாணவர்கள் 12,364 பேரும், தனிதேர்வர்கள் 1,043 பேரும் என மொத்தம் 13 ஆயிரத்து 407 பேர் ‘ஆப்சென்ட்' ஆகியுள்ளதாக தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x