Published : 17 Feb 2024 02:49 PM
Last Updated : 17 Feb 2024 02:49 PM

“10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 411 எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியது பாஜக” - ஆர்.எஸ்.பாரதி

விழுப்புரத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகிறார். உடன் திமுக துணை பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர்.

விழுப்புரம்: கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழு வதும் 411 எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியுள்ளது என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், மத்திய பாஜக அரசை கண்டித்து விழுப்பு ரம், நகராட்சித்திடலில் நேற்று மாலை ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியது: மோடி ஒரு நாளைக்கு போட்டுக் கொள்ளும் உடையின் மதிப்பு ரூ. 10 லட்சம் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். ஆடம்பர வாழ்க்கை நடத்தும் மோடி, தான் விலைக்கு வாங்கிய ஊடகங்களை மட்டும் நம்புகிறார்.

2016-ம் ஆண்டு நடந்த தேர்த லில், ரூ.570 கோடியை தேர்தல் பார்வையாளர்கள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் 2017-ம் ஆண்டு உத்தரவிட்டது.

திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சிகாரர்களுக்கு தற்போது அமலாக்கத்துறையை அனுப்பி வரும் மத்திய அரசு, இந்த ரூ.570கோடி யாருடையது என்று இதுவரையிலும் ஏன் கண்டுபிடிக்க வில்லை?.

2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜயகாந்த் திமுக கூட்டணியில் இடம்பெறுவார் என எதிர்பார்த்தோம். அப்போது அவர் நம் கூட்டணியில் இருந்திருந்தால் திமுக ஆட்சி அமைத்திருக்கும். அதைத் தொடர்ந்து கருணாநிதி,ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோர் இன்னமும் உயிருடன் இருந்து இருப்பார்கள்.

2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தமிழகத்தில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது மத்திய அரசுதான். மத்திய அரசின்தில்லு முல்லு காரணமாக முதல்வர் நாற்காலியில் துரதிஷ்டமாக அமர்ந்தவர் பழனிசாமி.

வர இருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பில், தமிழகம், புதுச்சேரியில் 40க்கு 40 திமுக கூட்டணிக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளில் நாடு முழுவதும் 411 எம்எல்ஏக்களை பாஜகவிலைக்கு வாங்கியுள்ளது. இதுதான் அவர்கள் காட்டும் ஜனநாயகம். விரைவில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஏப்ரல் 16-ம் தேதி தமிழகத்திற்கான தேர்தல் என்று நானே அறிவிக்கி றேன் என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், திமுகவின் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளரான சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் தெற்கு மாவட்டசெயலாளர் புகழேந்தி எம்எல்ஏ, கள்ளக்குறிச்சி வடக்குமாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்எல்ஏ, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரான கௌதம சிகாமணி எம்.பி , உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ மணிக்கண்ணன், மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் லட்சுமணன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏக்கள் புஷ்பராஜ், செந்தமிழ் செல்வன், மாசிலாமணி, சேதுநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயசந் திரன், மாவட்ட பொருளாளர் ஜன கராஜ், நகர செயலாளர் சக்கரை, திமுக நிர்வாகிகள் அன்னியூர் சிவா, செஞ்சி சிவா, தினகரன், கண்ணன் ஆனந்த் மற்றும் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான். செஞ்சி ஒன்றிய குழுத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x