Published : 15 Feb 2024 05:51 AM
Last Updated : 15 Feb 2024 05:51 AM

ஆளுநர் உரையல்ல.. பேரவை தலைவர் உரை: செல்வப்பெருந்தகை கருத்து

சென்னை: ஆளுநர் உரையாற்றாமல் அதை எப்படி ஆளுநர் உரை என்று சொல்ல முடியும். இது ஆளுநர் உரை அல்ல. பேரவை தலைவரின் உரை என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம்:

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: ஆளுநர் உரையாற்றாமல் அதை எப்படி ஆளுநர் உரை என்று சொல்ல முடியும். இது ஆளுநர் உரை அல்ல. பேரவை தலைவரின் உரை.

பேரவை தலைவர் மு.அப்பாவு: அது முடிந்துபோன கதை.

செல்வப்பெருந்தகை: இது எனது கருத்து, எங்கள் கட்சியின் கருத்து. பேரவை தலைவரின் உரையை வாழ்த்தி பேச மகிழ்ச்சி அடைகிறோம்.

கே.பி.முனுசாமி (அதிமுக): ‘இது ஆளுநர் உரை அல்ல. பேரவை தலைவரின் உரைதான்’ என்பதை பேரவை தலைவரான நீங்கள் ஏற்கிறீர்களா.

அப்பாவு: அது அவரது கருத்து. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிப்பு என்றுதான் நான் கூறியுள்ளேன்.

கே.பி.முனுசாமி: பேரவை தலைவர் கூறிய பிறகும்கூட, ‘இது ஆளுநர் உரை அல்ல’ என்று தனது கட்சியையும் சேர்த்து உறுப்பினர் கூறியுள்ளார். இதை பேரவை தலைவர் ஏற்கிறாரா?

அப்பாவு: ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் செல்வப்பெருந்தகை பேசலாம்.

செல்வப்பெருந்தகை: உறுப்பினருக்கு இன்னும் பழைய பாசம் போகவில்லை என்று நினைக்கிறேன்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x