Published : 11 Feb 2024 06:36 AM
Last Updated : 11 Feb 2024 06:36 AM

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க உரிமம் வழங்கப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க புதிதாகஎந்த உரிமமும் வழங்கப்பட வில்லை என தமிழக அரசு, உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித் துள்ளது.

காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி மார்க்ஸ் என்பவர் கடந்த 2019-ம்ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய பெட்ரோலியத்துறைச் செயலாளர் மற்றும் மத்திய வேளாண் துறைச் செயலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்,‘‘ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்குதமிழக அரசு உரிமம் வழங்காததால் காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பகுதிகளில் எந்தப் பணிகளும் தொடங்கப்படவில்லை.

தடை விதித்து சட்டம்: மேலும் தமிழக அரசு கடந்த 2020-ம் ஆண்டு தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்கள் மேம்பாட்டுச் சட்டத்தை இயற்றியுள்ளதால், அந்த சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட் டிருந்தது.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மாநில அரசு ப்ளீடர் ஏ. எட்வின் பிரபாகர், காவிரிடெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க இதுவரை எந்தபுதிய உரிமமும் வழங்கப்பட வில்லை என்றார். அதைப்பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தர விட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x