Published : 01 Feb 2024 04:04 AM
Last Updated : 01 Feb 2024 04:04 AM

சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

பிரதிநிதித்துவப் படம்

மதுரை: பண்டிகைக் கால நெரிசலை சமாளிக்க ஜனவரி மாதத்தில் வியாழக் கிழமைகளில் சென்னை - நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த சேவை பயணிகளின் வசதிக்காக மேலும், 2 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை - நாகர்கோவில் வந்தே பாரத் சிறப்பு ரயில் ( 06067 ) சென்னை எழும்பூரில் இருந்து பிப்ரவரி 1 முதல் மார்ச் 28 வரை வியாழக் கிழமைகளில் காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 2.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறு மார்க்கத்தில் நாகர்கோவில் சென்னை வந்தே பாரத் சிறப்பு ரயில் ( 06068 ) குறிப்பிடப்பட்ட அதே வியாழக்கிழமைகளில் மதியம் 2.50 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

சென்னை செல்லும் சிறப்பு ரயில் மதுரையிலிருந்து மாலை 5.55 மணிக்கு புறப்படுகிறது. மறு மார்க்கத்தில் சென்னையிலிருந்து நாகர் கோவில் செல்லும் ரயில் மதுரைக்கு காலை 10.56 மணிக்கு வந்து சேருகிறது. இந்த சிறப்பு வந்தே பாரத் சிறப்பு ரயில்களுக்கான பயணச் சீட்டு முன் பதிவு தற்போது நடைபெறுகிறது என, மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x