Published : 21 Jan 2024 10:08 AM
Last Updated : 21 Jan 2024 10:08 AM

தேர்தல் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுக குழு அமைப்பு

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று விடுத்த அறிக்கை: திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் மக்களவைத் தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த, மதிமுக சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜுனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், அரசியல் ஆய்வு மையச் செயலாளர் ஆவடிஇரா.அந்திரிதாஸ், தேர்தல் பணிச் செயலாளர் வி.சேஷன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல, மதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், கொள்கை விளக்க அணிச்செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தணிக்கைக் குழு உறுப்பினர்வழக்கறிஞர் இரா.செந்தில்செல்வன், இளைஞரணிச் செயலாளர் ப.த.ஆசைத்தம்பி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x