Published : 04 Jan 2024 06:10 PM
Last Updated : 04 Jan 2024 06:10 PM

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 14-வது முறையாக நீட்டிப்பு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14-வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி காட்சி மூலமாக அவர் ஆஜர்படுத்தபட்டார்.

இதனையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி. இதன்மூலம் 14-வது முறையாக அவரது காவல் நீட்டிக்கபட்டுள்ளது.

இதனிடையே, ஜாமீன் கோரி 3-வது முறையாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு வரும் திங்கட்கிழமை (ஜனவரி 8) விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x