Published : 02 Jan 2024 09:31 AM
Last Updated : 02 Jan 2024 09:31 AM

கச்சத்தீவில் பிப். 23, 24-ல் திருவிழா

ராமேசுவரம்: ஒவ்வோர் ஆண்டும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் கச்சத்தீவு திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு அந்தோணியார் ஆலயத் திருவிழா பிப்ரவரி 23-ம் தேதி மாலை 4 மணியளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

தொடர்ந்து, திருச்ஜெபமாலை, இரு நாட்டு மக்களும் சேர்ந்து தூக்கி வரும் சிலுவைப் பாதை நிகழ்ச்சி, நற்கருணை ஆராதனை, இரவு அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்ட தேர் பவனி நிகழ்ச்சிகள் நடைபெறும்.

பிப்ரவரி 24-ம் தேதி காலை 7.30 மணியளவில் சிறப்புத் திருப்பலி, கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது. தொடர்ந்து கொடியிறக்கம் நடைபெற்று, விழா நிறைவடையும் என இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானபிரகாசம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x