Published : 11 Aug 2014 07:21 PM
Last Updated : 11 Aug 2014 07:21 PM

சட்ட மசோதா எதிரொலி: அதிகரிக்கிறது வெளிநாட்டு மதுபான வகைகளின் விலை

தமிழக சட்டப்பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ஆயத்தீர்வை உயர்வுக்கான சட்ட மசோதாவின் எதிரொலியால், வெளிநாட்டு மதுபான வகைகளின் விலை அதிகரிக்கிறது.

சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன் தாக்கல் செய்த சட்ட மசோதாவின் விவரம்:

அரசுக்கு கூடுதல் வருமானத்தைப் பெருக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுபானங்களுக்கு அதிகளவு விதிக்கப்படத்தக்க ஆயத்தீர்வையை சாதாரண வகைகளுக்கு புரூப் லிட்டர் ஒன்றுக்கு ரூ.125-லிருந்து ரூ.250 ஆகவும், நடுத்தர வகைகளுக்கு ரூ.300 ஆகவும், உயர்தர வகைகளுக்கு ரூ.500 ஆகவும் உயர்த்த முடிவுசெய்யப்பட்டுள்ளது என்று அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதாவின் எதிரொலியாக, தமிழகத்தில் வெளிநாட்டு மதுபான வகைகளின் விலை விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x