Published : 31 Dec 2023 04:04 AM
Last Updated : 31 Dec 2023 04:04 AM

தச்சங்குறிச்சியில் ஜன.6-ல் 2024-ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி

பிரதிநிதித்துவப் படம்

புதுக்கோட்டை: வரும் 2024-ம் ஆண்டில் தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வரும் ஜன. 6-ம் தேதி நடைபெறுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில், விண்ணேற்பு அடைக்கல மாதா தேவலாயத் திருவிழா மற்றும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி முதல் வாரத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, மாவட்ட ஆட்சியரிடம் அப்பகுதி ஜல்லிக்கட்டு ஏற்பாட்டாளர்கள் அண்மையில் மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, பல்வேறு துறை அலுவலர்களால் ஆய்வு செய்யப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தச்சங்குறிச்சியில் ஜன. 6-ம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதியளித்து, தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மாவட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து, தச்சங்குறிச்சியில் ஜல்லிக்கட்டு நடத்து வதற்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x