Published : 26 Dec 2023 06:02 AM
Last Updated : 26 Dec 2023 06:02 AM

மழையால் சாலைகளில் ஏற்பட்ட 4 ஆயிரம் பள்ளங்கள் சீரமைப்பு: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-வது வார்டு, அன்னை சத்யா நகரில் நேற்று மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: மாநகராட்சிப் பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அப்புறப்படுத்தம் பணிதொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக கடந்த டிச.6 முதல் 24-ம்தேதி வரை 1 லட்சத்து 34 ஆயிரத்து606 டன் குப்பைக் கழிவுகள் மற்றும்9 ஆயிரத்து 604 டன் தோட்டக் கழிவுகள் என மொத்தம் 1 லட்சத்து 44 ஆயிரத்து 210 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.

டிச.1 முதல் 24-ம் தேதி வரை 9ஆயிரத்து 969 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 5 லட் சத்து 64 ஆயிரத்து 958 பேர் பயனடைந்துள்ளனர். மிக்ஜாம் புயல் மற்றும் கனமழைக்கு பிறகு எந்தவொரு தொற்று நோயும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் கவனக் குறைவாக இருக்கக் கூடாது என்ற காரணத்தால் சிறப்பு மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை கணக்கெடுத்து அவற்றை சீர்செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 3 ஆயிரத்து 873 சாலைகளில் 9 ஆயிரத்து 307 சாலைப் பள்ளங்கள் கண்டயறியப்பட்டு 4 ஆயிரத்து162 பள்ளங்கள் சீரமைக்கப்பட்டுள் ளன. மீதமுள்ள பள்ளங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வரு கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x