Published : 11 Dec 2023 06:32 AM
Last Updated : 11 Dec 2023 06:32 AM

செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து

பிரதிநிதித்துவப் படம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கி உள்ளது. சுமார் 10 பெட்டிகள் அதன் தடத்தில் இருந்து புரண்டதாக தகவல்.

தூத்துக்குடியில் இருந்து வந்த சரக்கு ரயில் செங்கல்பட்டு - பரனூர் இடையே தடம்புரண்டது. இந்த ரயிலில் இரும்பு பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ரயில் பாதையை சீர் செய்யும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரவு ரயில் தடம்புரண்டுள்ளது. இதனால் சென்னை - தென் மாவட்ட ரயில் சேவை தாமதகமாக வாய்ப்பு இருப்பதாக தகவல்.

இன்று மாலைக்குள் பாதை சீர் செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. இதனால் புறநகர் ரயில் சேவை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x