Published : 06 Dec 2023 05:42 AM
Last Updated : 06 Dec 2023 05:42 AM

முரசொலி நிலம் தொடர்பாக சர்ச்சை கருத்து: ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு ரத்து

சென்னை: சென்னையில் உள்ள முரசொலி அறக்கட்டளை அலுவலகம் பஞ்சமிநிலத்தில் உள்ளதாகவும், அந்த நிலத்தின் மூல பத்திரத்தை ஸ்டாலின் வெளியிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டைகூறியுள்ளதாக கூறி ராமதாஸுக்குஎதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான ஆர்.எஸ்.பாரதி, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குதொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும், வழக்கை ரத்துசெய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்குதொடர்ந்திருந்தார். இந்த வழக்கைவிசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ராமதாஸுக்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்திருந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x