Published : 26 Nov 2023 04:06 AM
Last Updated : 26 Nov 2023 04:06 AM

சென்னையில் நிர்வாக காரணங்களுக்காக 13 மின்சார ரயில்களின் நேரம் மாற்றம்

சென்னை: நிர்வாக காரணங்களுக்காக, சென்னை- செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் மார்க்கத்தில் மின்சார ரயில்களின் நேரம் நாளை (நவ.27) முதல் மாற்றம் செய்யப்பட உள்ளன.

கும்மிடிப்பூண்டி - தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,கடற்கரை ரயில் நிலையத்தில் மாலை 4.50 மணிக்கு பதிலாக, 10 நிமிடம் முன்பாக மாலை 4.40 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மாலை 4.40 மணிக்கு பதிலாக, மாலை 4.50 மணிக்கு புறப்படும்.

சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இரவு 8.45 மணிக்கு பதிலாக, இரவு 8.35 மணிக்கு இயக்கப்படும். சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இரவு 8.35 மணிக்கு பதிலாக, இரவு 8.45 மணிக்கு புறப்படும். சென்னை கடற்கரை - செங்கல்பட்டுக்கு இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 10.05 மணிக்கு புறப்பட்டு செல்லும்.

செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு அதிகாலை 4.45 மணிக்கு பதிலாக, அதிகாலை 4.55 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு- சென்னை கடற்கரைக்கு மாலை 5.45 மணிக்கு பதிலாக, மாலை 6 மணிக்கு புறப்படும். செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு மாலை 6.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, மாலை 6.15 மணிக்கு புறப்படும்.

காஞ்சிபுரம் - சென்னை கடற்கரைக்கு மாலை 6.10 மணிக்கு பதிலாக, மாலை 6.15 மணிக்கு புறப்படும். இது தவிர, 4 மின்சார ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த நேரம் மாற்றம் நாளை (நவ.27) முதல் நடைமுறைக்கு வருகிறது.

ரயில் சேவையில் மாற்றம்: சென்னை கடற்கரை - திருமால்பூருக்கு நவ.28, 29 ஆகிய தேதிகளில் காலை 7.27 மணிக்கு புறப்படும் மின்சார ரயில், செங்கல்பட்டு - திருமால்பூர் இடையே பகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது. திருமால்பூர் - சென்னை கடற்கரைக்கு நவ.28, 29 ஆகிய தேதிகளில் முற்பகல் 11.05 மணிக்கு புறப்பட வேண்டிய மின்சார ரயில், திருமால்பூர்-செங்கல்பட்டு இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. இந்தத் தகவல் சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x