Published : 20 Nov 2023 02:40 PM
Last Updated : 20 Nov 2023 02:40 PM

டாஸ்மாக் மதுக் கடைகளை 3 நாட்களுக்கு மூட உத்தரவு @ திருவண்ணாமலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இதையொட்டி, திருவண்ணாமலை நகரம் காமராஜர் சிலை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை (எண் - 9841), மணலூர்பேட்டை சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை (எண் - 9261), வேங்கிக்கால் புறவழிச் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடை (எண் - 9490),

பார்கள் உள்ள உணவகங்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான அங்காடி ஆகிய உரிமம் பெற்ற மதுபானக் கடைகள் மற்றும் பார்கள் நவ.25-ம் தேதி பகல் 12 மணி முதல் 27-ம் தேதி இரவு 10 மணி வரை மூன்று நாட்களுக்கு மது விற்பனை நடைபெறாமல் மூடி வைக்க வேண்டும் என ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x