Published : 24 Oct 2023 10:16 AM
Last Updated : 24 Oct 2023 10:16 AM

தீவிர புயலாக வலுப்பெற்ற ‘ஹமூன்’ - சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வங்கக்கடலில் உருவான `ஹமூன்’ புயல்

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள `ஹமூன்’ புயலானது தீவிர புயலாக வலுபெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று புயலாக மாறி உள்ளது. இந்தப் புயலுக்கு `ஹமூன்’ எனப் பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த புயல் நாளை (அக்,25 ஆம் தேதி) அதிகாலை வங்கதேசத்தில் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த புயல் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (அக்.25) காலை வங்கதேசம் டிங்கோனா தீவு - சந்திவிப் இடையே கரையைக் கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 27 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஹமூன் புயலானது தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கி.மீ. வேகத்தில் வடகிழக்கு திசையில் ஹமூன் புயல் நகர்ந்து செல்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும்
மீனவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x