Published : 20 Oct 2023 05:14 AM
Last Updated : 20 Oct 2023 05:14 AM

மேட்டூர் அணை நீர்மட்டம் 46 அடியாக உயர்வு

மேட்டூர்/தருமபுரி: மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,846 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 7,355 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட, நீர் திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணை நீர்மட்டம் நேற்று 45.62 அடியாகவும், நீர் இருப்பு 15.16 டிஎம்சியாகவும் இருந்தது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த 16-ம் தேதி காலை விநாடிக்கு 6,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து பின்னர் 6 ஆயிரம் கனஅடியாகக் குறைந்தது. கடந்த 17, 18-ம் தேதிகளிலும் விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியாகவே நீர்வரத்து நீடித்தது. இந்நிலையில், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 6,500 கனஅடியாக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x