Published : 18 Oct 2023 06:12 AM
Last Updated : 18 Oct 2023 06:12 AM

தமிழகத்தில் ரூ.127 கோடியில் கடற்பாசி பூங்கா: மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தகவல்

சென்னை: தமிழகத்தில் ரூ.127 கோடியில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவை மத்திய அரசு அமைத்து வருவதாக மாமல்லபுரத்தில் நடந்த சர்வதேச மாநாட்டில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார்.

சர்வதேச மீன்பிடி நிர்வாகத்தில் காலநிலை மாற்றத்தை பிரதானப்படுத்துதல் மற்றும் இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் மீன்வள மேலாண்மை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் குறித்த சர்வதேச மாநாடு மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டை, மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்து பேசியதாவது:

தமிழகத்தில் ரூ.127 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்காவை மத்திய அரசு அமைத்து வருகிறது. பல்வேறு திட்டங்களின் கீழ்,கடந்த 9 ஆண்டுகளில் 61.90 லட்சம் வேலைவாய்ப்புகள் மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மத்திய மீன்வளத் துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x
News Hub
Icon