Published : 17 Oct 2023 04:04 AM
Last Updated : 17 Oct 2023 04:04 AM

விருதுநகரில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை - வீடுகளை சூழ்ந்த தண்ணீர்

விருதுநகர்: விருதுநகரில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கி விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

விருதுநகரில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி அதிகாலை வரை இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. சுமார் 2.30 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையால் மார்க்கெட், பழைய பேருந்து நிலையத்தைச் சுற்றிய பகுதிகள், தந்தி மரத்தெரு சந்திப்பு, பர்மா காலனி, சிவகாசி அணுகு சாலை, பி.ஆர்.சி. பாலம் கீழ் பகுதி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

சிவஞானபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தன்னாட்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருக்களில் மழை நீர் தேங்கியது. அப்பகுதியில் குடிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் மக்கள் சிரமம் அடைந்தனர்.

நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மி.மீ.ல்): காரியாபட்டி- 13 , ஸ்ரீவில்லிபுத்தூர்- 3, சாத்தூர்- 15, சிவகாசி- 28, பிளவக்கல்- 22, வத்திராயிருப்பு- 31, கோவிலாங்குளம்- 58, வெம்பக்கோட்டை- 14, அருப்புக்கோட்டை- 40, திருச்சுழி- 81, விருதுநகர்- 91.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x