Published : 15 Oct 2023 04:02 AM
Last Updated : 15 Oct 2023 04:02 AM

திருநின்றவூர் - திருவள்ளூர் இடையே பொறியியல் பணி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம் மார்க்கத்தில், திருநின்றவூர் - திருவள்ளூர் நிலையங்களுக்கு இடையே பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புறநகர் மின்சார ரயில் சேவையில் இன்று (அக்.15) மாற்றம் செய்யப்பட உள்ளது.

மூர்மார்க்கெட் வளாகம் - அரக்கோணத்துக்கு இன்று (அக்.15) காலை 9.10, முற்பகல் 11, நண்பகல் 12.40 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள் பட்டாபிராம் - திருவள்ளூர் இடையேவிரைவு பாதையில் இயக்கப்படும் என்பதால், இவை பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை சாலை ஆகிய நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

மூர்மார்க்கெட் வளாகம் - திருவள்ளூருக்கு இன்று (அக்.15) காலை 9.15, 9.35, முற்பகல் 11.30, நண்பகல் 12.00, மதியம் 1 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள் பட்டாபிராம்-திருவள்ளூர் இடையே விரைவு பாதையில் இயக்கப்படும் என்பதால், பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

மூர்மார்க்கெட் வளாகம் - திருத்தணிக்கு இன்று காலை 10, முற்பகல் 11.45 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய நிலையங்களில் நிற்காமல் செல்லும். சென்னை கடற்கரை - திருவள்ளூருக்கு இன்று காலை 9.55, மதியம் 1.05 ஆகிய நேரங்களில் புறப்படும் மின்சார ரயில்கள், பட்டாபிராம், நெமிலிச்சேரி, வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை நிலையங்களில் நிற்காமல் செல்லும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x