Published : 28 Sep 2023 05:54 AM
Last Updated : 28 Sep 2023 05:54 AM

கடற்கரை - வேலூர் சிறப்பு ரயில்: கிரிவலத்துக்காக திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

சென்னை: திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் விழாவை முன்னிட்டு, சென்னை கடற்கரை-வேலூர் கன்டோன்மென்டுக்கு இயக்கப்படும் மெமு சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரைநீட்டிக்கப்பட உள்ளது.

அதன் விவரம்: சென்னை கடற்கரையில் இருந்து செப்.29-ம் தேதி மாலை 6 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06033) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை இரவு 9.45 மணிக்குஅடையும். அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும்.

திருவண்ணாமலையில் இருந்து செப்.30-ம் தேதி அதிகாலை 3.45மணிக்கு மெமு சிறப்பு ரயில் (06034) புறப்பட்டு, வேலூர் கன்டோன்மென்ட்டை அதிகாலை 5.35 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டுசென்னை கடற்கரைக்கு காலை 9.05 மணிக்கு அடையும் என்று சென்னை ரயில்வே கோட்ட செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x