Published : 09 Sep 2023 03:34 PM
Last Updated : 09 Sep 2023 03:34 PM

நாகர்கோவில் - தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை: நாகர்கோவில் - தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில் சேவையை மேற்கொள்ள ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுகுறித்து மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாகர்கோவில் - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06012) நாகர்கோவிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.35 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரயில் செப். 17, 24 ஆகிய தேதிகளில் இயக் கப்படுகிறது.

மறுமார்க்கமாக தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரயில் (எண் 06011) தாம் பரத்திலிருந்து திங்கள்கிழமை காலை 8.15 மணிக்குப் புறப்பட்டு இரவு 8.55 மணிக்கு நாகர்கோவிலை சென்றடையும். செப். 18, 25 ஆகிய தேதிகளில் இந்த ரயில் இயக்கப்படும். இந்த ரயில்கள் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருது நகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ரயில் நிலை யங்களில் நின்று செல்லும். சிறப்பு ரயிலுக்கான முன் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x