Published : 06 Sep 2023 07:03 AM
Last Updated : 06 Sep 2023 07:03 AM

சேலம் | சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 6 பேர் உயிரிழப்பு

சேலம்: சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதியதில் 6 பேர் உயிரிழந்தனர்.

ஆம்னி வேன் மோதியதில் குழந்தை உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சோகம் நிகழ்ந்துள்ளது. சேலத்திலிருந்து ஈரோடு நோக்கி சென்ற ஆம்னி வேன், தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர்.

சாலை ஓரமாக நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி வேன் மோதியதில், ஓட்டுநர் விக்னேஷ் மற்றும் பிரியா என்பவர் பலத்த காயமடைந்த நிலையில், செல்வராஜ், மஞ்சுளா, ஆறுமுகம், பழனிசாமி, பாப்பாத்தி மற்றும் 1 வயது குழந்தை சஞ்சனா உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கொண்டலாம்பட்டியில் இருந்து பெருந்துறைக்கு சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பாக சங்ககிரி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x