Published : 04 Sep 2023 05:38 AM
Last Updated : 04 Sep 2023 05:38 AM

இன்ஜின் பழுதால் தவித்த மீனவர்களை மீட்ட கடலோர காவல்படை

ராமேசுவரம்: விசைப் படகு இன்ஜின் பழுதாகி நடுக்கடலில் தவித்த மண்டபம் மீனவர்கள் 5 பேரை கடலோர காவல்படையினர் கப்பல் மூலம் பத்திரமாக மீட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து விசைப்படகில் 5 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். மண்டபத்தில் இருந்து 15 கடல் மைல் தொலைவில் நடுக்கடலில் படகின் இன்ஜின் பழுதால் அவர்கள் தவித்தனர். அவர்கள் கடலோரக் காவல் படையினரிடம் வயர்லெஸ் ரேடியோ மூலம் உதவி கோரினர்.

இதையடுத்து, பாக் நீரிணை கடற்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த இந்தியக் கடலோரக் காவல்படையினர், ஐசிஜிஎஸ் சி-432 ரோந்து கப்பலில் விரைந்து சென்று நடுக்கடலில் தவித்த மீனவர்களையும், விசைப்படகையும் பத்திரமாக மீட்டு மண்டபம் அழைத்து வந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x