Published : 29 Jul 2023 05:53 PM
Last Updated : 29 Jul 2023 05:53 PM
கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோனில் வெடி விபத்து: 9 பேர் பலி: கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவை சேர்ந்தவர் ரவி. இவர் கிருஷ்ணகிரி பழையபேட்டையில் இருந்து காட்டிநாயனப்பள்ளி முருகன் கோயிலுக்கு செல்லும் நேதாஜி சாலையில் பட்டாசு குடோன் மற்றும் மொத்த விற்பனை கடை நடத்தி வந்தார். இவரது கடையை ஓட்டியவாறு 2 மரக்கடைகள், வெல்டிங் கடை, பைனான்ஸ் கடை, ஓட்டல், ஷோபா தயாரிக்கும் கடை, தண்ணீர் சுத்தகரிக்கும் நிறுவனம், குடியிருப்புகள் உள்ளன.
இந்த நிலையில், சனிக்கிழமை காலையில் சுமார் 9.45 மணிக்கு பயங்கர சத்தத்துடன் வெடி வெடித்தது. சிறிது நேரத்தில் பட்டாசு கடையில் இருந்து பட்டாசுகள் நாலபுறமும் வெடித்து சிதறின. கண் இமைக்கும் நேரத்தில் பட்டாசு குடோன், கடையை ஓட்டியிருந்த கடைகள் தரைமட்டானது. இந்த வெடி விபத்தில் பட்டாசு குடோன், கடை நடத்தி வந்த ரவி, அவரது மகன், மகள் வெல்டிங் கடை ஊழியர்கள் இருவர், ஓட்டல் கடை உரிமையாளர், அடையாளம் தெரியாத ஒரு பெண், ஒரு ஆண் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment