Published : 20 Jul 2023 08:02 AM
Last Updated : 20 Jul 2023 08:02 AM

பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் பாலாஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து

ஸ்ரீ நயினார் பாலாஜி | படம்: ட்விட்டர்

சென்னை: பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேரந்திரனின் மகன் ஸ்ரீ நயினார் பாலஜியின் ரூ.100 கோடி மதிப்பிலான பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை - விருகம்பாக்கம் பகுதியில் சுமார் 1.3 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தை மோசடியாக ராதாபுரத்தில் பாலாஜி பத்திரப்பதிவு செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ராதாபுரம் மண்டல துணை பத்திரப்பதிவு துறை தலைவர் பிறப்பித்துள்ளார். தமிழக மாநில பாஜக இளைஞர் அணி துணைத்தலைவாராக பாலாஜி இயங்கி வருகிறார். அவர் மோசடி செய்தது உறுதியான நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு வைத்தது. நயினார் நாகேரந்திரன், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக இயங்கி வருகிறார். பாஜக மாநில துணைத் தலைவராகவும் அவர் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x