Published : 30 Jun 2023 05:37 PM
Last Updated : 30 Jun 2023 05:37 PM

குடிநீர் வாரியம் வசமாகிறது அம்மா குடிநீர்: சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றம்

சென்னை: ரூ.300 கோடியில் பிராட்வே பேருந்து நிலையத்தை மேம்படுத்தவும், அம்மா குடிநீர் ஆலைகளை சென்னை குடிநீர் வாரியத்திடம் வழங்கவும் சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி மான்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில்நடைபெற்றது. இதில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவற்றில் முக்கிய தீர்மானங்களின் விவரம்:

  • சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங் சிலை, பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் அவரது சிலை நிறுவ தடையின்மைச் சான்று வழங்கபட்டதற்கு அனுமதி.
  • சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களை முக்கிய இடங்களுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல அனுமதி.
  • தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சேரும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு கல்விக் கட்டணத்தை வழங்க அனுமதி.
  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சியை வழங்கும் ஆசிரியர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல அனுமதி.
  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100% தேர்ச்சியை வழங்கும ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை 1500 ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்வு.

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெரும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 10 ஆயிரம் ரூபாயாக உயர்வு.

  • சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாதிரி ஐக்கிய நாடுகள் சபை அமைக்க அனுமதி.
  • சென்னையில் 4 இடங்களில் முன்னூரிமை அடிப்படையில் ஒருங்கிணைந்த வாகன நிறுத்த மேலாண்மை திட்டத்தை ரூ.162 கோடி செலவில் செயல்படுத்துவது தொடர்பாக அரசிடம் அனுமதி பெற ஒப்புதல்.
  • சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 53 இடங்களில் செயல்பட்ட அம்மா குடிநீர் நிலையங்களை மெட்ரோ வாட்டர் நிர்வாகத்திடம் அளிக்க அனுமதி.
  • சென்னை பிராட்வேயில் உள்ள பேருந்து நிலையத்தை வணிக வளாகத்துடன் கூடிய போக்குவரத்து முனையமாக மாற்றும் திட்டத்தை ரூ.300 கோடி செலவில் செயல்படுத்துவது தொடர்பாக அரசிடம் அனுமதி பெற ஒப்புதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x