Published : 16 Jun 2023 05:30 AM
Last Updated : 16 Jun 2023 05:30 AM

கீழடி அருகே கொந்தகையில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

கொந்தகை அகழாய்வின்போது கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழிகள்.

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கொந்தகையில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வுப் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏப்ரல் 6-ம் தேதி தொடங்கி வைத்தார். இங்கு 4 குழிகள் தோண்டப்பட்டன. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானை ஓடுகள், சேதமடைந்த பானைகள், மரக்கரி துகள்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து, கொந்தகையில் நடைபெற்ற அகழாய்வுப் பணியில், ஒரே இடத்தில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. 2 அடியிலேயே தென்பட தொடங்கிய நிலையில், முழுமையாக தோண்டிய பின்னர் முதுமக்கள் தாழிகள் திறக்கப்படும், என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.

இதனிடையே, கீழடி 9-ம் கட்ட அகழாய்வுப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x