Published : 20 Mar 2025 06:06 AM
Last Updated : 20 Mar 2025 06:06 AM
காலை 6 மணிக்கு மன்றோ தீவில் படகுப் பயணம் எனத் திட்டமிட்டிருந்தோம். எதிர்பாராமல் அரை மணி நேரம் கொட்டித் தீர்த்தது மழை. சூடான கட்டஞ்சாயாவைக் குடித்துவிட்டுப் படகில் ஏறினோம். லேசான குளிரும் இருளுமாக ஆரம்பித்தது பயணம். அலையாத்தி மரங்களுக்குள் படகு சென்றபோது, மரங்களில் இருந்து விழுந்த நீர்த்துளிகள் சிலிர்க்க வைத்தன. கொக்கு, பாம்புத்தாரா, மீன்கொத்தி போன்ற பல பறவைகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன.
கிளைகள் இல்லாமல் குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்திருந்த அலை யாத்தி மரங்கள் மீது ஏறச் சொல்லி, விதவிதமாக ஒளிப்படம் எடுத்துக் கொடுத்தார் படகு ஓட்டுநர். பயணத்தை சுவாரசியமாக்கும் விதத்தில் குறைவான ஒலியில் பாடல்களையும் ஒலிக்கவிட்டார். அரை மணி நேரம் கழித்து அந்த அற்புதமான காட்சியைக் கண்டோம். படகின் இரண்டு பக்கங்களிலும் உயரமான மரங்களின் உச்சியில் அமர்ந்து, நனைந்த உடலை லேசான
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment