Published : 28 Nov 2024 06:12 AM
Last Updated : 28 Nov 2024 06:12 AM
நல்ல அழகான படித்துறை. அகல மான, தலை குப்புற இறங்கும் பெரிய படிகள். கீழே கடல்போல விரிந்து சுழித்தோடும் கோதாவரி ஆறு. எதிரே இரட்டைப்பாலம். பக்கத்திலிருந்த கோயில்களைப் பார்ப்பதற்காக காரில் நீண்ட பயணம். குழந்தைகள் ஆற்றைப் பார்த்ததும் கொஞ்ச நேரம் நின்று போகலாம் என்று நச்சரித்துக் கொண்டிருந்தார்கள். ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ கூடாது என்கிற நிபந்தனையின் பேரில் காரை ஓரம் கட்டிவிட்டுப் பாதிப் படிகளில் நின்று விரிந்தோடும் ஆற்றைப் பார்ப்பதே பேரானந்தமாக இருந்தது.
ஆற்றின் மீதிருந்த பெரிய பாலத்தில் ரயில் ஒன்று மெதுவாகப் போனது. அதைப் பார்த்த பெரிய குழந்தை சொன்னாள், ``அப்பா, எவ்வளவு பெரிய ‘மவுத் ஆர்கன்!” என்று. பாலத்தின் மீது செல்லும் ரயில் அவளுக்கு மவுத் ஆர்கன் போலத் தெரிந்திருக்கிறது. அதைக் கேட்டதும் சின்னவள் சொன்னாள், “ஆமாம் ஒரு ராட்சசன்தான் இதை வாசிக்க முடியும்” என்று. எனக்கு அதைக் கேட்தும், `என்ன அழகான கற்பனை’ என்று வியப்பு மேலிட்டது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment